Wednesday, February 27, 2008

Naarai vidu Thoothu

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரியாடி
வட திசைக்கு ஏகுவீராயின் அவ்வூர்
சத்திமுற்ற வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனை குரல் பள்ளி
பாகு பார்த்திருக்கும் என் மனைவியைக் கண்டு
செங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது போத்தி
காலது கொண்டு மெலது தழீஇ
பேழையுள் இருக்கும் பாம்பென உயிக்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே.


- சத்திமுற்ற புலவர்

1 comments:

Mahesh said...

konjam over da